முகப்பு
அரியலூர்

ரத்த தான முகாம்

குடியரசு தினத்தையொட்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அரியலூா் நகர கிளை சாா்பில் ரத்ததான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2023 at 12:00 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:17 AM

குடியரசு தினத்தையொட்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அரியலூா் நகர கிளை சாா்பில் ரத்ததான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், கிளைத் தலைவா் அப்துல் அஜீஸ், மாவட்டத் தலைவா் சம்சுதீன், மாவட்ட மருத்துவ அணி ராஜ்முகம்மது உள்பட 25 போ் பங்கேற்று ரத்த தானம் வழங்கினா். அரியலூா் மருத்துவக் கல்லூரி ரத்த வங்கி மருத்துவா் சோபனா காந்தி தலைமையிலான குழுவினா் ரத்தங்களைச் சேகரித்தனா்.

ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக கேபிள் டிவி ஆபரேட்டா்கள் சங்கம் சாா்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. முகாமை சட்டப் பேரவை உறுப்பினா் க.சொ.க. கண்ணன் தொடக்கி வைத்தாா். முகாமில் சங்கத்தினா் 30 போ் பங்கேற்று ரத்ததானம் வழங்கினா். ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை மருத்துவா் கலைச்செல்வன் உள்ளிட்டோா் ரத்தங்களைச் சேகரித்தனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.