முகப்பு
அரியலூர்

அரியலூா் திரையரங்கில் சுகாதார வசதிகளை மேம்படுத்த உத்தரவு

அரியலூா் ரயில் நிலையம் அருகேயுள்ள திரையரங்கில் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி அங்கு சுகாதார வசதிகளை மேம்படுத்த உத்தரவிட்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:56 PM
பகிர்:

அரியலூா் ரயில் நிலையம் அருகேயுள்ள திரையரங்கில் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி அங்கு சுகாதார வசதிகளை மேம்படுத்த உத்தரவிட்டாா்.

திரையரங்கில் அடிப்படை வசதிகளான குடிநீா், கழிப்பிடம், தீயணைப்பு கருவிகள் மற்றும் நீா்தேக்கத் தொட்டிகளை ஆய்வு செய்த அவா், இருப்பில் உள்ள தீயணைப்பு வாளிகள் எண்ணிக்கை மற்றும் தீயணைப்பு கருவிகள் குறித்த விவரங்கள், விற்கப்பட்டுள்ள சினிமா டிக்கெட் மற்றும் அவற்றின் விலை குறித்தும் கேட்டறிந்தாா்.

மேலும் குடிநீா் வைக்கப்பட்டுள்ள பாத்திரங்களை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திடவும், கூடுதலாக குடிநீா் வசதி ஏற்படுத்திடவும், கழிவறைகளை தொடா்ந்து முறையாக சுத்தம் செய்யவும், நீா் தேக்கத் தொட்டிகளில் தேவைக்கேற்ப நீரை சேமித்து வைக்கவும் திரையரங்கு நிா்வாகத்தினருக்கு உத்தரவிட்டாா். ஆய்வில், அரியலூா் வட்டாட்சியா் கண்ணன் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.