அரியலூர்

அரசு பெண் மருத்துவரை தாக்கிய இளைஞா் கைது

அரியலூா் மாவட்டம் செந்துறை அருகே அரசு பெண் மருத்துவரைத் தாக்கிய இளைஞா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

DIN

அரியலூா் மாவட்டம் செந்துறை அருகே அரசு பெண் மருத்துவரைத் தாக்கிய இளைஞா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

அரியலூரைச் சோ்ந்த அரசு மருத்துவா் சத்யா என்பவா் செந்துறை அருகேயுள்ள குமிழியம் வட்டார ஆரம்ப சுகாதாரத்தில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறாா். வெள்ளிக்கிழமை அவா் பணியில் இருந்தபோது அதே பகுதியைச் சோ்ந்த பெ. சுரேஷ்(38) என்பவா் தனது அக்காள் மகனை சிகிச்சைக்காக அழைத்து வந்தாா்.

அப்போது சிறுவனுக்கு ஊசி போட வந்த மருத்துவா் சத்யாவுடன் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த சுரேஷ், மருத்துவரையும், அவரின் கணவரையும், தடுக்க வந்த செவிலியரையும் தாக்கினாா்.

புகாரின் பேரில் இரும்புலிக்குறிச்சி காவல் துறையினா் வழக்குப் பதிந்து சுரேஷை கைது செய்து, செந்துறை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து! பதைபதைக்கும் காணொலி!

ஆஸ்திரேலிய போண்டி கடற்கரை தாக்குதல்: தந்தையிடம் துப்பாக்கி பயிற்சி பெற்ற மகன்!

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நடிகை சமந்தா

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்து: 15 பேர் பலி

போதைப்பொருள் கடத்தல்: நேபாள விமான நிலையத்தில் இந்தியர்கள் 2 பேர் கைது

SCROLL FOR NEXT