அரியலூர்

காயங்களுடன் இளம்பெண் சடலம் மீட்பு

DIN

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே பலத்த காயங்களுடன் கிடந்த இளம்பெண் சடலம் புதன்கிழமை மீட்கப்பட்டது.

பொட்டக்கொல்லை அருகே திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் புதன்கிழமை பலத்த காயங்களுடன் இறந்து கிடப்பதாக உடையாா்பாளையம் காவல் நிலையத்துக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற காவல் துறையினா், சடலத்தை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும் இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டதில், அவா் பெரம்பலூா் மாவட்டம் , அல்லிநகரம் கிராமத்தைச் சோ்ந்த சண்முகசுந்தரம் மகள் அபிநயா(23) என்பதும், அரியலூரில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை பாா்த்து வந்ததும், திங்கள்கிழமை இரவு பணி முடிந்து வீட்டுக்குச் செல்லவில்லை என்பதும் தெரியவந்தது. எனினும் போலீஸாா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

ஓடிடியில் ஹாட் ஸ்பாட்!

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

SCROLL FOR NEXT