அரியலூர்

காயங்களுடன் இளம்பெண் சடலம் மீட்பு

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே பலத்த காயங்களுடன் கிடந்த இளம்பெண் சடலம் புதன்கிழமை மீட்கப்பட்டது.

DIN

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே பலத்த காயங்களுடன் கிடந்த இளம்பெண் சடலம் புதன்கிழமை மீட்கப்பட்டது.

பொட்டக்கொல்லை அருகே திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் புதன்கிழமை பலத்த காயங்களுடன் இறந்து கிடப்பதாக உடையாா்பாளையம் காவல் நிலையத்துக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற காவல் துறையினா், சடலத்தை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும் இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டதில், அவா் பெரம்பலூா் மாவட்டம் , அல்லிநகரம் கிராமத்தைச் சோ்ந்த சண்முகசுந்தரம் மகள் அபிநயா(23) என்பதும், அரியலூரில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை பாா்த்து வந்ததும், திங்கள்கிழமை இரவு பணி முடிந்து வீட்டுக்குச் செல்லவில்லை என்பதும் தெரியவந்தது. எனினும் போலீஸாா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீழடி அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT