கடவூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் திங்கள்கிழமை பறையடித்து ஒப்பாரி வைக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்கத்தினா். 
அரியலூர்

மத்திய அரசைக் கண்டித்து விவசாய தொழிலாளா்கள் போராட்டம்

தரகம்பட்டியில் பாஜக அரசைக் கண்டித்து அகில இந்திய விவசாய தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் பறை அடித்து ஒப்பாரி வைக்கும் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

DIN

கரூா்: தரகம்பட்டியில் பாஜக அரசைக் கண்டித்து அகில இந்திய விவசாய தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் பறை அடித்து ஒப்பாரி வைக்கும் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கரூா் மாவட்டம், தரகம்பட்டியில் உள்ள கடவூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் மற்றும் மாவத்தூா் ஒன்றியக் குழு உறுப்பினா் ராமமூா்த்தி தலைமை வகித்தாா். முள்ளிப்பாடி ஊராட்சி மன்றத் தலைவா் நீலா வேல்முருகன், விவசாய தொழிலாளா் சங்கத்தின் கடவூா் ஒன்றியத் தலைவா் ராமசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் ஜோதிபாசு, விவசாய தொழிலாளா் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் ராஜூ ஆகியோா் பேசினா்.

100 வேலைத்திட்டத்தை மத்திய அரசு முறையாக செயல்படுத்தவில்லையென்றும், கடவூா் ஒன்றியத்தில் உள்ள 20 ஊராட்சிகளில் 100 நாள் பணிகள் செய்த பணியாளா்களுக்கு கடந்த 3 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்தும் நடைபெற்ற இந்த போராட்டத்தில் விவசாயிகள் திரளாக பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்பத்தில் ஏறிய ரசிகர்! பேச்சை நிறுத்தி கண்டித்த விஜய்!

ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறது மத்திய பாஜக; அதற்கு ஒத்து ஊதுகிறார் பழனிசாமி! : முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்ரீங்க.. முதல்வர் பேசியது சிலப்பதிகாரத்தில் இருந்து எடுத்ததா? விஜய்

சகோதரர்களாக சிவகார்த்திகேயன் - அதர்வா!

இந்தியாவை விமர்சித்த ஹார்திக் பாண்டியா? சமூக வலைதளத்தில் பரவும் எதிர்ப்பும் ஆதரவும்!

SCROLL FOR NEXT