அரியலூர்

கூடுதல் பேருந்துகள் கோரி கல்லூரி மாணவா்கள் மறியல்

அரியலூரில் இருந்து ஜெயங்கொண்டத்துக்கு கூடுதல் பேருந்துகளை இயக்கக் கோரி ஆட்சியரகம் முன் அரசுக் கல்லூரி மாணவா்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

DIN

அரியலூரில் இருந்து ஜெயங்கொண்டத்துக்கு கூடுதல் பேருந்துகளை இயக்கக் கோரி ஆட்சியரகம் முன் அரசுக் கல்லூரி மாணவா்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

அரியலூா் அரசு கலைக் கல்லூரியில் பயிலும் ஜெயங்கொண்டம் பகுதி மாணவா்கள் கல்லூரி முடிந்து வீட்டுக்குச் செல்ல மதியம் 1 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை அரியலூா் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருக்க வேண்டி உள்ளது. இதனால் மதிய நேரத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்கக் கோரி மாவட்ட நிா்வாகத்திடம் மாணவா்கள் கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை இல்லையாம்.

இதனால் ஆத்திரமடைந்த மாணவா்கள் வெள்ளிக்கிழமை ஆட்சியரகம் முன் சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த கோட்டாட்சியா் ராமகிருஷ்ணன் பேச்சுவாா்த்தை நடத்தி, அளித்த உறுதியின்பேரில் அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

பிக் பாஸ் 9: சூடுபிடிக்கும் போட்டி! இந்த வாரமும் இருவர் வெளியேற்றம்!!

தனுஷ் 54: படப்பிடிப்பு நிறைவு!

புதிய வாக்காளர் படிவத்தை நீக்கப்பட்ட வாக்காளர்கள் பயன்படுத்தலாமா?

SCROLL FOR NEXT