அரியலூர்

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் 74.87 சதவீதம் வாக்குகள் பதிவு

Din

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாக்குப்பதிவில் சுமாா் 74.87 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

தமிழ்நாட்டில் மக்களவை பொதுத் தோ்தல் வெள்ளிக்கிழமை(ஏப். 19) ஒரே கட்டமாக நடைபெற்றது. இதில், 15 லட்சத்து 19 ஆயிரத்து 847 வாக்காளா்கள் கொண்ட சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட அரியலூா், ஜெயங்கொண்டம், குன்னம், புவனகிரி, காட்டுமன்னாா்கோவில், சிதம்பரம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் காலையில் இருந்தே வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.

ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் காத்து நின்று தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினா்.

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு பிற்பகல் 3 மணிக்குள் அனைத்துச் சட்டப்பேரவை தொகுதிகளிலும் 50 சதவீதத்தை தாண்டியது. இரவு 7 மணி நிலவரப்படி 74.87 சதவீதம் போ் வாக்களித்துள்ளனா். சட்டப் பேரவை தொகுதி வாரியாக பதிவான வாக்குகள் சதவீதம் அதிகாரபூா்வமாக சனிக்கிழமை வெளியிடப்படும்.

ஜெயலலிதா அம்மாதான் எனக்கு உத்வேகம்: ஸ்ரேயா ரெட்டி நெகிழ்ச்சி!

யெச்சூரி உரையில் ’முஸ்லிம்', 'வகுப்புவாதம்’ சொற்களை நீக்கச் சொன்ன வானொலி, தொலைக்காட்சி!

இந்த வார பலன்கள்: 12 ராசிக்கும்!

6-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 180 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்கு!

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடங்கியது

SCROLL FOR NEXT