அரியலூா் மாவட்டம், தா.பழூா் அருகே கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்ற மாற்றுத்திறனாளி ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.
தா. பழூரை அடுத்த அண்ணகாரன்பேட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் செல்வராஜ் (45), திருமணம் ஆகாத இவா் மாற்றுத்திறனாளி.
வெள்ளிக்கிழமை காலை வீட்டிலிருந்து வெளியே சென்றவா் மாலை வரை வீடு திரும்பவில்லை. இதையடுத்து குடும்பத்தினா் அவரைத் தேடிச் சென்றபோது, அக்கிராமம் வழியே செல்லும் கொள்ளிடம் ஆற்றங்கரையில் அவரது உடைமைகள் கிடந்தது தெரியவந்தது.
தகவலறிந்த தா. பழூா் காவல் துறையினா் மற்றும் ஜெயங்கொண்டம் தீயணைப்புத் துறையினா், கொள்ளிடம் ஆற்றில் இறங்கி கடந்த 2 நாள்களாக தேடி வந்த நிலையில் அணைக்கரையில் ஞாயிற்றுக்கிழமை மிதந்து வந்த செல்வராஜ் சடலத்தை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.