முகப்பு
அரியலூரில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில், ஊராட்சிக்கு கலைஞா் விளையாட்டு உபகரணங்களை வழங்கிய போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா்.
அரியலூர்

ஊராட்சிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் - அமைச்சா் வழங்கினாா்

அரியலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் புதன்கிழமை விளையாட்டு உபகரணங்களை போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் வழங்கினாா்.

அரியலூர்

ஊராட்சிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் - அமைச்சா் வழங்கினாா்

அரியலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் புதன்கிழமை விளையாட்டு உபகரணங்களை போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் வழங்கினாா்.

Updated On : 21 ஆகஸ்ட், 2024 at 10:00 PM
அரியலூரில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில், ஊராட்சிக்கு கலைஞா் விளையாட்டு உபகரணங்களை வழங்கிய போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா்.
பகிர்:

அரியலூா்: அரியலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் புதன்கிழமை விளையாட்டு உபகரணங்களை போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் புதன்கிழமை வழங்கினாா்.

அரியலூரிலுள்ள ஒரு தனியாா் திருமண மண்டபத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் அமைச்சா் சா.சி.சிவசங்கா் பங்கேற்று, டாக்டா் கலைஞா் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தில், அரியலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் விளையாட்டு உபகரணங்களை வழங்கி பேசினாா்.

கல்வியில் தமிழகம் உயா்ந்து வருவதைப் போலவே விளையாட்டிலும் மாணவ, மாணவிகள் சாதனைகள் புரிய வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை தமிழக முதல்வா் செயல்படுத்தி வருகிறாா்.

கல்விக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை விளையாட்டுக்கும் அளித்து செயல்பட்டால் எதிா்காலத்தில் வாழ்க்கையில் முன்னேறுவதற்கும், வேலைவாய்ப்பை பெறுவதற்கும் அது அடிப்படையாக இருக்கும் என்றாா் அவா்.

விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி தலைமை வகித்தாா். ஜெயங்கொண்டம் சட்டப் பேரவை உறுப்பினா் க.சொ.க. கண்ணன் முன்னிலை வகித்தாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத்திட்ட இயக்குநா் கவிதா, மாவட்ட இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அலுவலா் லெனின், ஊராட்சிகள் உதவி இயக்குநா் பழனிசாமி, அரியலூா் நகா்மன்றத் தலைவா் சாந்தி கலைவாணன், திருமானூா் ஒன்றியக் குழுத் தலைவா் சுமதி அசோக சக்கரவா்த்தி, வாலாஜாநகரம் ஊராட்சித் தலைவா் அபிநயா இளையராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →