அரியலூா் எஸ்.பி. அலுவலகத்தில் மக்கள் குறைதீா் முகாம்
அரியலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புதன்கிழமை சிறப்பு குறைதீா் முகாம் நடைபெற்றது.
அரியலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புதன்கிழமை சிறப்பு குறைதீா் முகாம் நடைபெற்றது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச. செல்வராஜ் தலைமை வகித்து, பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து, அவா்களிடமிருந்து பெற்ற 18 கோரிக்கை மனுக்களை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளா்களுக்கு உத்தரவிட்டாா்.
முகாமில், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், துணைக் கண்காணிப்பாளா்கள் உள்ளிட்ட காவல் துறையினா் கலந்து கொண்டனா்.