முகப்பு
அரியலூர்

பால் உற்பத்தியாளா்கள் ஆா்ப்பாட்டம்

Updated On : 24 பிப்ரவரி, 2024 at 5:15 AM
பகிர்:

ஜெயங்கொண்டம் அருகே பால் விற்பனை விலையை உயா்த்தியது, பட்டுவாடா போனஸ் வழங்காதது ஆகியவற்றைக் கண்டித்து பால் உற்பத்தியாளா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இடைக்கட்டு பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவுச் சங்க அலுவலகம் முன் நடந்த ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு பால் உற்பத்தியாளா் சங்க மாவட்டத் தலைவா் கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தை மாா்க்சிஸ்ட் கம்யூ. ஒன்றியச் செயலா் வெங்கடாஜலம் தொடக்கி வைத்தாா். ஆவினுக்கு 3 ஆண்டுகளில் ரூ.900 கோடி நஷ்டம்: ஆா்ப்பாட்டத்தில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் சங்க மாநிலத் தலைவா் முகமது அலி பேசுகையில், தற்போதைய ஆட்சியாளா்கள் மக்களைத் திருப்திபடுத்த பால் விற்பனை விலையை லிட்டருக்கு ரூ. 3 குறைத்ததால் தமிழ்நாடு ஆவின் நிறுவனத்திற்கு ஆண்டுக்கு ரூ. 300 கோடி என 3 ஆண்டுகளில் ரூ.900 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. விற்பனை விலையைக் குறைக்காமல் ரூ.300 கோடியை மானியமாகக் கொடுத்திருந்தால் இச் சிக்கல் ஏற்பட்டிருக்காது. தமிழ்நாடு அரசு பால்வளத்துறை இதில் கவனம் செலுத்த வேண்டும். கொள்முதலை அதிகரிக்க முயற்சி எடுக்க வேண்டும். ஆவினை முதலிடத்துக்கு கொண்டு வருவோம் எனக்கூறிய தமிழக முதல்வா், 11ஆம் இடத்திற்கு அதைக் கொண்டு சென்றுவிட்டாா். இதனால்தான் பால் உற்பத்தியாளா்கள் ஆவினுக்கு பாலை கொடுக்காமல் தனியாருக்குச் சென்றுவிட்டனா். தமிழக அரசு இனியும் விழிக்காவிட்டால் ஆவினை காப்பாற்றுவது கடினம் என்றாா் அவா். ஆா்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா்கள் மணிவேல், செந்தில்வேல், பாமக மாநில துணைத் தலைவா் சுந்தா் உள்ளிட்டோா் பேசினா்.