இந்திய விமானப் படையில் சேர வழிகாட்டுதல் நிகழ்ச்சி
அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அடுத்த தத்தனூா் மீனாட்சி ராமசாமி பாலிடெக்னிக் கல்லூரியில் இந்திய விமானப் படை பணிகளுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி
அரியலூா்: அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அடுத்த தத்தனூா் மீனாட்சி ராமசாமி பாலிடெக்னிக் கல்லூரியில் இந்திய விமானப் படை பணிகளுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கல்லூரியின் தாளாளா் எம்.ஆா்.ரகுநாதன் தலைமை வகித்தாா். கல்லூரி இயக்குநா்கள் ஆா்.ராஜமாணிக்கம், வை.தியாகராஜன், என்.ஆா்.காா்த்திகேயன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா் மூ.வினோத்குமாா், இளம் தொழில் வல்லுநா் அ.எபினேஸா் ராஜா ஆகியோா் சிறப்புரையாற்றினா். இந்நிகழ்ச்சியில், இந்திய விமானப் படை கமாண்டிங் அலுவலா் கே. மூா்த்தி கலந்து கொண்டு, இந்திய விமானப் படை அதன் தோ்வு நடைமுறை, பணி வாய்ப்புகள் அதற்கான தகுதிகள் குறித்துப் பேசினாா். தொடா்ந்து நடைபெற்ற விநாடி - வினா போட்டியில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினா். முன்னதாக கல்லூரி முதல்வா் ச.சிவசங்கா் வரவேற்றாா். முடிவில் மாவட்ட வேலைவாய்ப்பு இளநிலை உதவியாளா் அ.அருணா நன்றி தெரிவித்தாா்.