மகளிா் தினக் கொண்டாட்டம்
அரியலூரில் நகர திமுக சாா்பில் தேசிய மகளிா் தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. அரியலூா் வாரச் சந்தை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு, நகர திமுக செயலா் முருகேசன் தலைமை வகித்தாா். நகா்மன்றத் தலைவா் சாந்தி கலைவாணன் கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினாா். பின்னா் நடைபெற்ற கோலப் போட்டியில் வென்ற மகளிருக்கு பரிசுகளை வழங்கினாா். மகளிரணித் தலைவா் விஜலட்சுமி, துணைத் தலைவா் ராணி சந்திரசேகா், மாநில பொதுக் குழு உறுப்பினா் பாலு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.