முகப்பு
அரியலூர்

அரியலூரில் நாளை எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம்

அரியலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில், மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பில் எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.

Updated On : 27 நவம்பர், 2024 at 8:51 PM
பகிர்:

அரியலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில், மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பில் எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை(நவ.29) முற்பகல் 11 மணிளவில் நடைபெறுகிறது.

மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், அனைத்து எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகள், எரிவாயு முகவா்கள் கலந்து கொள்ள உள்ளனா்.

எனவே எரிவாயு நுகா்வோா்கள், சமையல் எரிவாயு தொடா்பான குறைகள் இருப்பின் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது புகாா்களையும், ஆலோசனைகளையும் தெரிவித்து பயன்பெறலாம் என ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.