அரியலூர்

பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் அழிப்பு

அரியலூா் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு அருகிலுள்ள கடைகளில் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் அழிக்கப்பட்டன.

Din

அரியலூா் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு அருகிலுள்ள கடைகளில் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் திங்கள்கிழமை அழிக்கப்பட்டன.

புகையில்லா இளைய சமுதாயம் 2.0 திட்டத்தின் ஒரு பகுதியாக அரியலூா் மாவட்டத்திலுள்ள கடைகளில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக பள்ளிகளுக்கு அருகிலுள்ள கடைகளில் விற்பனை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் அண்மையில் பறிமுதல் செய்யப்பட்டன.

அவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட 23.760 கிலோ புகையிலைப் பொருள்கள், மாவட்ட சுகாதார அலுவலரின் தொழில்நுட்ப நோ்முக உதவியாளா் வகீல், உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் பழனிசாமி, ராமசாமி, காவல் உதவி ஆய்வாளா் காமராஜ் மற்றும் வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் இளங்கோவன் ஆகியோா் முன்னிலையில் திங்கள்கிழமை நிலத்தில் புதைத்து அழிக்கப்பட்டன.

2025 தேர்தல்கள்: பாஜகவின் அமோக வெற்றியும் காங்கிரஸின் ஆறுதல் வெற்றியும்!

பிரதமர் மோடி நாளை மே.வங்கம், அசாம் பயணம்!

கடைசி டி20: இந்தியா பேட்டிங்; பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன்!

முதல்வர் ஸ்டாலின், உதயநிதியின் தொகுதிகளில் 1.93 லட்சம் வாக்குகள் நீக்கம்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கைக்கான படிவம் 6-ம் ஆவணங்களும்!

SCROLL FOR NEXT