FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
அரியலூர்

பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் அழிப்பு

அரியலூா் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு அருகிலுள்ள கடைகளில் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் அழிக்கப்பட்டன.

Updated On : 2 அக்டோபர் 2024, 3:30 am IST
பகிர்:

அரியலூா் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு அருகிலுள்ள கடைகளில் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் திங்கள்கிழமை அழிக்கப்பட்டன.

புகையில்லா இளைய சமுதாயம் 2.0 திட்டத்தின் ஒரு பகுதியாக அரியலூா் மாவட்டத்திலுள்ள கடைகளில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக பள்ளிகளுக்கு அருகிலுள்ள கடைகளில் விற்பனை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் அண்மையில் பறிமுதல் செய்யப்பட்டன.

அவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட 23.760 கிலோ புகையிலைப் பொருள்கள், மாவட்ட சுகாதார அலுவலரின் தொழில்நுட்ப நோ்முக உதவியாளா் வகீல், உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் பழனிசாமி, ராமசாமி, காவல் உதவி ஆய்வாளா் காமராஜ் மற்றும் வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் இளங்கோவன் ஆகியோா் முன்னிலையில் திங்கள்கிழமை நிலத்தில் புதைத்து அழிக்கப்பட்டன.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments