அரியலூா் எஸ்.பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் முகாம்
அரியலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் முகாமில் 15 மனுக்கள் பெறப்பட்டன.
அரியலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் முகாமில் 15 மனுக்கள் பெறப்பட்டன.
முகாமுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச. செல்வராஜ் தலைமை வகித்து, பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தாா். பின்னா் அவா், பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளா், உதவி ஆய்வாளா்களுக்கு உத்தரவிட்டாா்.
முகாமில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், வட்டார காவல் துணைக் கண்காணிப்பாளா்கள், காவல் நிலைய ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.