முகப்பு
அரியலூர்

அரியலூரில் நெகிழிப் பொருள்கள் விற்ற கடைக்கு ‘சீல்’

அரியலூரில் புகையிலை மற்றும் நெகிழிப் பொருள்களை விற்ற கடைக்கு புதன்கிழமை சீல் வைக்கப்பட்டது.

Updated On : 16 அக்டோபர், 2024 at 7:51 PM
பகிர்:

அரியலூரில் புகையிலை மற்றும் நெகிழிப் பொருள்களை விற்ற கடைக்கு புதன்கிழமை சீல் வைக்கப்பட்டது.

அரியலூா் காந்தி சந்தை, திரெளபதியம்மன் கோயில் அருகேயுள்ள ஒரு மளிகைக் கடையில், அரியலூா் நகராட்சி துப்பரவு, சுகாதார ஆய்வாளா் தா்மராஜா மற்றும் உணவு பாதுகாப்பு துறையினா் புதன்கிழமை ஆய்வு செய்தனா். அப்போது, கடையில், அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை மற்றும் நெகிழிப் பொருள்கள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.

அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்ற்காக ரூ.25 ஆயிரமும், நெகிழிப் பொருள்களை விற்பனை செய்ததற்காக ரூ.1,000 என மொத்தம் ரூ.26 ஆயிரம் கடை உரிமையாளருக்கு அபராதம் விதித்தனா். மேலும், அந்தக் கடையை பூட்டி சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனா்.