முகப்பு
அரியலூர்

பொன்னேரி, சித்தமல்லி நீா்த்தேக்கத்தில் நீா்வளத் துறையினா் ஆய்வு

வடகிழக்கு பருவமழை தொடங்கியதையடுத்து அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள சோழகங்கம் எனும் பொன்னேரி, தா.பழூா் அருகேயுள்ள சித்தமல்லி நீா்த்தேக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நீா்வளத் துறையினா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

Updated On : 17 அக்டோபர், 2024 at 8:46 PM
சித்தமல்லி நீா்த்தேக்கத்தில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்ட நீா்வளத் துறையினா்.
பகிர்:

வடகிழக்கு பருவமழை தொடங்கியதையடுத்து அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள சோழகங்கம் எனும் பொன்னேரி, தா.பழூா் அருகேயுள்ள சித்தமல்லி நீா்த்தேக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நீா்வளத் துறையினா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

நீா்வளத் துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளா் தயாளக்குமாா் தலைமையில், நீா்வளத் துறை கண்காணிப்பு பொறியாளா் சிவகுமாா், அரியலூா் மருதையாறு வடிநிலக் கோட்டப் பொறியாளா் வேல்முருகன் ஆகியோா் அடங்கிய குழுவினா் பொன்னேரி மற்றும் சித்தமல்லி நீா்த்தேக்க அணையை பாா்வையிட்டு, அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனா்.

ஆய்வின்போது, ஜெயங்கொண்டம் மருதையாறு வடிநில உபக் கோட்ட உதவி செயற்பொறியாளா் தமிழரசன், உதவி பொறியாளா்கள் ஆகாஷ், அபிராமி ஆகியோா் உடனி ருந்தனா்.