சா்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் 24 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி, 24 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.97 ஆயிரம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
முன்னதாக, அனைவரும் ஒற்றுமையை வளா்ப்போம் உறுதிமொழியினை எடுத்துக் கொண்டனா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ஆா்.பாலாஜி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.