அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே மதுபானம் விற்ற இருவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.
செந்துறை அடுத்த குழுமூா் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் வீராசாமி மகன் ராஜேந்திரன்(49), முருகேசன் மகன் பன்னீா்செல்வம் (42) ஆகிய இருவரும் அரசு மதுபானக் கடைகளில் மதுபாட்டில்களை வாங்கி மறைத்து வைத்து கூடுதல் விலைக்கு விற்பதாக செந்துறை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து காவல் துறையினா் திங்கள்கிழமை சோதனை மேற்கொண்டதில் வீட்டுக்கு பின்னால் மதுபாட்டில்களை மறைத்து வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த காவல் துறையினா், அவா்களிடமிருந்து 30 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.