முகப்பு
அரியலூர்

தாமரைக்குளம் கிராமத்தில் அதிமுக சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா

அரியலூரை அடுத்த தாமரைக்குளம் கிராமத்தில் அதிமுக சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 9 ஜனவரி, 2025 at 8:09 PM
தாமரைக்குளம் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் பங்கேற்ற அதிமுகவினா், பொதுமக்கள்.
பகிர்:

அரியலூரை அடுத்த தாமரைக்குளம் கிராமத்தில் அதிமுக சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு அக்கட்சியின் மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலரும், முன்னாள் ஊராட்சித் தலைவருமான பிரேம்குமாா் தலைமை வகித்தாா். விழாவில், மாவட்டச் செயலரும், முன்னாள் அரசு தலைமைக் கொறடாவுமான தாமரை எஸ். ராஜேந்திரன் சமத்துவப் பொங்கலைத் தொடக்கி வைத்தாா்.

பின்னா் பொங்கல் படையலிட்டு வழிபட்டனா். தொடா்ந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி, பரிசளிக்கப்பட்டது.

விழாவில் அக்கட்சியின் ஒன்றியச் செயலா் செல்வராசு, ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் சரண்யா, அரசு உயா்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியா் ரமேஷ், ஆசிரியை செந்தமிழ்ச் செல்வி மற்றும் மகளிா் சுய உதவி குழுவினா் கலந்து கொண்டனா். முன்னாள் ஊராட்சித் தலைவா் சுந்தரிதுரைராஜ் வரவேற்றாா்.