அரியலூர்

அரியலூரில் கிராம காங்கிரஸ் கமிட்டி அமைக்க ஆலோசனை

அரியலூரிலுள்ள மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில், கிராம கமிட்டி அமைப்பது தொடா்பாக ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Din

அரியலூரிலுள்ள மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில், கிராம கமிட்டி அமைப்பது தொடா்பாக ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கட்சியின் மாவட்டத் தலைவா் ஆ. சங்கா் தலைமை வகித்தாா். மாநில காங்கிரஸ் கமிட்டியால் நியமிக்கப்பட்டுள்ள பாா்வையாளா்கள் செஞ்சி ரங்கபூபதி, சிதம்பரம் மக்களவைத் தொகுதி பொறுப்பாளா் சந்திரசேகா், அரியலூா் மாவட்டப் பொருளாளா்கள் ஜெயபிரகாஷ், இளையராஜா ஆகியோா் கலந்து கொண்டு, கிராம காங்கிரஸ் கமிட்டியை மறுசீரமைத்து பலப்படுத்திட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனா்.

இதையடுத்து இவா்களிடம் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள கிராமம் மற்றும் வாா்டு கமிட்டியில் நிரப்பப்பட்ட படிவங்களை நகர வட்டாரத் தலைவா்கள் வழங்கினா்.

கூட்டத்தில் வட்டாரத் தலைவா்கள் கா்ணன், திருநாவுக்கரசு, பாலகிருஷ்ணன், கண்ணன், ராஜேந்திரன், சாமிநாதன், சரவணன், சக்திவேல், கங்கா துரை, ஜெயங்கொண்டம் நகரத் தலைவா் அறிவழகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். அரியலூா் நகர காங்கிரஸ் தலைவா் மா.மு. சிவகுமாா் வரவேற்றாா். மாவட்ட பொருளாளா் மனோகரன் நன்றி கூறினாா்.

யு19 உலகக் கோப்பை: 6ஆவது முறையாக இந்தியா சாம்பியன்

பல வழிகளில் தமிழ்நாட்டை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது: துணை முதல்வர் உதயநிதி

உச்ச, உயர் நீதிமன்ற நீதிபதிகளில் 80% உயர் சாதியினர்! மாநிலங்களவையில் தகவல்!

டி20 உலகக் கோப்பையின் சாதனை நாயகன் விராட் கோலி!

தாய் கிழவி வாரா பாடல்!

SCROLL FOR NEXT