அரியலூர்

செந்துறை அருகே பெண் சிசுவின் சடலம் மீட்பு

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே பிறந்து சில நாள்களே ஆன பெண் சிசுவின் சடலம் மீட்கப்பட்டது.

Syndication

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே பிறந்து சில நாள்களே ஆன பெண் சிசுவின் சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.

செந்துறை அருகேயுள்ள குழுமூா் கிராமத்தில், காரப்பாடி செல்லும் சாலையில் உள்ள ஒரு குப்பை குவியலில், செவ்வாய்க்கிழமை அழுகிய நிலையில் பிறந்த சில நாள்களே ஆன பெண் சிசு ஒன்று கிடப்பதாக செந்துறை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்துக்கு சென்ற காவல் துறையினா் சிசுவின் சடலத்தை மீட்டு, அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

நத்தம் அருகே சாலை தடுப்பில் மோதி பால் வேன் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்த நிலையிலேயே பலி!

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் தர்மேந்திரா!

எதிர்ப்புகள் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

டாஸ்மாக் கடையை உடைத்து மதுபானம், ரொக்கப் பணம் திருட்டு

பண மோசடி: இந்திய கம்யூ. போராட்டம்

SCROLL FOR NEXT