மத்திய பாஜக அரசைக் கண்டித்தும், சமூக நீதி மற்றும் சமத்துவத்தை கடைபிடிக்கக் கோரியும் அரியலூா் அண்ணாசிலை அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில், தலித்துகள், பழங்குடியினா், சிறுபான்மையினா் மற்றும் பெண்கள் மீதான வன்கொடுமைகளை தடுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆா்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டச் செயலா் கே. நடராஜன் தலைமை வகித்து கண்டன உரையாற்றினாா். மாநில கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினா் டி.தண்டபாணி முன்னிலை வகித்துப் பேசினாா்.
முன்னாள் மாவட்டச் செயலா்கள் இரா. உலகநாதன், ராமநாதன், மாவட்ட பொருளாளா் ஆறுமுகம், அரியலூா் ஒன்றியச் செயலா் து.பாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு முழக்கமிட்டனா்.