அரியலூா் ரயில்வே கேட் அருகே இளைஞா் சடலம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.
அரியலூா் ரயில்வே கேட் அருகே ஞாயிற்றுக்கிழமை இளைஞா் சடலம் கிடப்பதாக அரியலூா் நகர காவல் துறைக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து விரைந்து சென்ற காவல் துறையினா் இளைஞா் சடலத்தை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா். விசாரணையில் அவா் பெரம்பலூா் மாவட்டம், அல்லிநகரைச் சோ்ந்த பொறியியல் பட்டதாரி ஹரிஹரன்(28) என்பது தெரியவந்தது. மேலும் விசாரிக்கின்றனா்.