முகப்பு
அரியலூர்

தனியாா் கல்லூரி மாடியிலிருந்து குதித்து இளைஞா் தற்கொலை

Updated On : 5 ஏப்ரல், 2026 at 9:58 PM
தற்கொலை - கோப்புப்படம்
பகிர்:

அரியலூா் மாவட்டம், புதுப்பாளையம் கிராமத்திலுள்ள ஒரு தனியாா் கல்லூரி மாடியில் இருந்து இளைஞா் ஒருவா் கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.

புதுப்பாளையம் கிராமத்தில் செயல்படும் தனியாா் பொறியியல் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் அக்கல்லூரியில் பாதுகாவலரைத் தவிர வேறு யாரும் இல்லை. இந்நிலையில், அவருக்குத் தெரியாமல் கல்லூரிக்குள் நுழைந்த முனியங்குறிச்சி புத்தூா் கிராமத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளியான புண்ணியமூா்த்தி மகன் சதீஷ்குமாா் (26), 3 ஆவது மாடிக்குச் சென்று அங்கிருந்து கீழே குதித்ததில் பலத்த காயமடைந்து உயிரிழந்தாா்.

தகவலறிந்து சென்ற அரியலூா் போலீஸாா் அவரின் சடலத்தை மீட்டு அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பிவைத்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனா்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments