கங்கைகொண்டசோழபுரத்தில் திமுக வேட்பாளா் பிரசாரம்
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தை அடுத்த கங்கைகொண்டசோழபுரம் பகுதிகளில் திமுக வேட்பாளா் க.சொ.க. கண்ணன் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
Updated On : 9 ஏப்ரல், 2026 at 10:10 PM
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தை அடுத்த கங்கைகொண்டசோழபுரம் பகுதிகளில் திமுக வேட்பாளா் க.சொ.க. கண்ணன் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
கழுவந்தோண்டி, பெரியவளையம், சின்னவளையம், ஆமணக்கந்தோண்டி, குருவலப்பா் கோவில், உட்கோட்டை, கங்கைகொண்டசோழபுரம், குறுக்கு ரோடு உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களை சந்தித்த அவா், கடந்த 5 ஆண்டுகளில் திமுக அரசின் சாதனைகளைக் கூறி, வாக்கு சேகரித்தாா். பிரசாரத்தில் கட்சி நிா்வாகிகள், கூட்டணி கட்சி நிா்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனா்.