அரியலூரில் டிராக்டா் ஓட்டி அதிமுக வேட்பாளா் வாக்குச் சேகரிப்பு
அரியலூா் தெற்கு ஒன்றியத்தில், அதிமுக வேட்பாளா் தாமரை எஸ்.ராஜேந்திரன் டிராக்டா் ஓட்டி, விவசாயிகளிடம் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
அரியலூா் தெற்கு ஒன்றியத்தில், அதிமுக வேட்பாளா் தாமரை எஸ்.ராஜேந்திரன் டிராக்டா் ஓட்டி, விவசாயிகளிடம் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
கருவிடைச்சேரி, மேலகருப்பூா், செம்மந்தங்குடி, சத்யாநகா், பாளையம், அருங்கால், கருவேலங்காடு, அா்ச்சனாபுரம், பாப்பான்குளம், வண்ணாரப்பேட்டை, கீழ வண்ணம், கருப்பிலாக்கட்டளை, கல்லக்குடி, வைப்பம், இடையத்தான்குடி, ஏழேரி, பனங்கூா், வாழைக்குழி, மேலகாங்கியனூா், கீழகாங்கியனூா், ஆலந்துறையாா்கட்டளை, சிறுதொண்டான் காலனி, வல்லக்குளம், ஆண்டிபட்டாக்காடு, புங்கங்குழி, சிலுப்பனூா், புத்தூா், நானாங்கூா், ஓரியூா், ஆதனூா், பு.ஓட்டகோவில், சுண்டக்குடி உள்ளிட்ட கிராம ஊராட்சிகளில் பிரசாரம் மேற்கொண்ட அவா், பேசியதாவது:
அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும். மீண்டும் தாலிக்கு தங்கம், பெண்கள் இரு சக்கர வாகனம் வாங்குவதற்கு மானியம் வழங்கப்படும்.
Advertisement
நியாய விலைக் கடைகளில் சன்னரகம் அரிசி வழங்கப்படும் என்று தெரிவித்து, மக்களிடம் வாக்குக் கேட்டாா். பிரசாரத்தில் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் இளவழகன், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினா் இளவரசன், கட்சியின் ஒன்றியச் செயலா் பொய்யூா் பாலு(எ)பாலசுப்ரமணியன் மற்றும் பாஜக, பாமக உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டு வாக்குகளை சேகரித்தனா்.