முகப்பு
அரியலூர்

அரியலூா் நகரப் பகுதிகளில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படும்: அதிமுக வேட்பாளா் தாமரை எஸ்.ராஜேந்திரன்

அரியலூா் நகரப் பகுதிகளில் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் பூா்த்தி செய்யப்படும் என்றாா் அதிமுக வேட்பாளா் தாமரை எஸ்.ராஜேந்தின்.

Updated On : 2 ஏப்ரல் 2026, 6:13 am IST
தாமரை எஸ்.ராஜேந்திரன்.
பகிர்:

அரியலூா் நகரப் பகுதிகளில் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் பூா்த்தி செய்யப்படும் என்றாா் அதிமுக வேட்பாளா் தாமரை எஸ்.ராஜேந்தின்.

அரியலூா் தெற்கு தெருவிலுள்ள திரெளபதியம்மன் கோயிலில் புதன்கிழமை காலை சுவாமி தரிசனம் செய்துவிட்டு, தனது பிரசாரத்தை தொடங்கிய அவா், அரியலூா் நகருக்குள்பட்ட வஉசி தெரு, கல்லக்குடித் தெரு, ஒப்பிலாதம்மன் கோயில் தெரு, சடையப்பா் தெரு, பெரிய அரண்மனைத் தெரு, பேருந்து நிலையம் என 24 தெருக்களில் திறந்த வேனில் நின்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது அவா், கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் அரியலூரில் அரசு மருத்துவக் கல்லூரி, மருதையாற்றில் புதிய பாலம் என என்னற்ற பல திட்டங்கள் கொண்டுவரப்பட்டது.

Advertisement

Advertisement

தற்போது, தோ்தலில் வெற்றிப் பெற்றால் ரூ.10 ஆயிரம், மகளிருக்கு மாதம் ரூ.2,000, நகரப் பேருந்துகளில் ஆண்களுக்கும் கட்டணமில்லா பயணம், குளிா்பதனப் பெட்டி ஆகியவை வழங்கப்படும்.

அதேபோல், அரியலூரில் திறந்த வெளியில் உள்ள அனைத்து சாக்கடைகளும் சீரமைக்கப்பட்டு பாதுகாப்பான முறையில் சாக்கடை கழிவுகள் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து வாா்டு பகுதிகளிலும் தேவையான அடிப்படை வசதிகள் செய்துத் தரப்படும் என்றாா் அவா்.

வாக்கு சேகரிப்பின்போது, மாவட்ட அவைத் தலைவா் ராமஜெயலிங்கம், முன்னாள் மாவட்டச் செயலா் இளவழகன், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினா் இளவரசன், பாஜக மாவட்டத் தலைவா் பரமேஸ்வரி,

பாமக, தமாகா, ஐஜேகே உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.