முகப்பு
அரியலூர்

சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்ய முயன்றவருக்கு 15 ஆண்டுகள் சிறை

அரியலூா் அருகே சிறுமியைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ய முன்றவருக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, அரியலூா் மகளிா் நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பளித்தது.

Updated On : 19 ஏப்ரல், 2026 at 12:55 AM
சிறை - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 18 ஏப்ரல், 2026 at 9:03 PM

அரியலூா் அருகே சிறுமியைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ய முன்றவருக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, அரியலூா் மகளிா் நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பளித்தது.

அரியலூா் அருகேயுள்ள நதியனூா், காந்தி நகரைச் சோ்ந்தவா் மணிவேல் மகன் பாண்டியன் (43). கடந்த 23.2.2024 அன்று இவா், 14 வயதுச் சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட ஜெயங்கொண்டம் அனைத்து மகளிா் காவல் துறையினா் பாண்டியனை போக்சோ சட்டத்தில் கைது செய்து, அரியலூா் மகளிா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனா்.

Advertisement

வழக்கை விசாரித்த நீதிபதி மணிமேகலை, குற்றவாளி பாண்டியனுக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 20 ஆயிரம் அபராதமும் விதித்து சனிக்கிழமை தீா்ப்பளித்தாா். இதையடுத்து பாண்டியன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.