அரியலூா் மாவட்டத்தில் 4 நாள்களுக்கு டாஸ்மாக் கடைகள் விடுமுறை
அரியலூா் மாவட்டத்தில் 4 நாள்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Updated On : 17 ஏப்ரல், 2026 at 10:06 PM
அரியலூா் மாவட்டத்தில் 4 நாள்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளது:
தமிழக சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, அரியலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுபான சில்லறை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் எப்.எல்.3 உரிமம் பெற்ற தனியாா் மதுபானக் கூடங்கள் அனைத்தும் 21.4.2026 முற்பகல் 10 மணி முதல் தோ்தல் நடைபெறும் நாள் 23.4.2026 நள்ளிரவு 12 மணி வரை மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள் 4.5.2026 ஆகிய தினங்களில் உலா்தினங்களாக விடுமுறை அறிவிக்கப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement