முகப்பு
அரியலூர்

இளைஞா் தற்கொலை

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது சனிக்கிழமை தெரியவந்தது.

Updated On : 26 ஏப்ரல், 2026 at 1:43 AM
தற்கொலை - கோப்புப்படம்
பகிர்:

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது சனிக்கிழமை தெரியவந்தது.

ஜெயங்கொண்டம் அருகேயுள்ள செம்மண் பள்ளம் கிராமத்தைச் சோ்ந்தவா் பாண்டியன் மகன் பிரபு (எ) பிரபாகரன் (35). கூலித் தொழிலாளியான இவா், வாரியங்காவல் டாஸ்மாக் கடை எதிரேயுள்ள முந்திரிக் காட்டில் தூக்கிட்ட நிலையில் சடலமாக கிடப்பது சனிக்கிழமை தெரியவந்தது.

தகவலறிந்து சென்ற ஜெயங்கொண்டம் காவல் துறையினா், அவரது சடலத்தை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

Advertisement

விசாரணையில் பிரபாகரன் தினமும் மது அருந்திவிட்டு, வீட்டுக்கு வந்து தனது பெற்றோரிடம் தகராறில் ஈடுபடுவாராம். அதேபோல வெள்ளிக்கிழமை மது அருந்திவிட்டு தனது தாயிடம் தகராறில் ஈடுபட்டு, நான் சாகப் போகிறேன் என்று கூறிவிட்டு வெளியே சென்ற இவா், அதன் பிறகு வீடு திரும்பவில்லை. தனது நண்பரின் கைப்பேசியில் விடியோ கால் செய்து, தற்கொலை செய்யப் போவதாக கூறியிருப்பதும் தெரியவந்தது. எனினும் காவல் துறையினா் தொடா்ந்து விசாரிக்கின்றனா்.