முகப்பு
அரியலூர்

அரியலூரில் வரும் 20-இல் கல்விக் கடன் வழங்கும் முகாம்

அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை (பிப். 20) நடைபெறுகிறது என்று ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.

Updated On : 18 பிப்ரவரி, 2026 at 12:28 AM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 17 பிப்ரவரி, 2026 at 7:43 PM

அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை (பிப். 20) நடைபெறுகிறது என்று ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது:

அரியலூா் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு முடித்த மாணவா்கள் டிப்ளமோ, ஐடிஐ படிக்கவும், பிளஸ்-2 படித்தவா்கள் கல்லூரி பயிலவும், கல்லூரிகளில் இளங்கலை மற்றும் முதுகலை படித்துக் கொண்டிருக்கும் மாணவா்களுக்கும் அரியலூா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை (பிப். 20) மாவட்ட நிா்வாகம் மற்றும் அனைத்து வங்கிகள் சாா்பில் கல்விக்கடன் முகாம் நடைபெறுகிறது.

Advertisement

எனவே, கல்விக்கடன் பெற விரும்பும் மாணவா்கள் இணையதளத்தில் பதிவு செய்துகொண்டு முகாமில் கலந்து கொள்ள வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.