முதல்வரால் வியாழக்கிழமை திறக்கப்பட்ட கரு.பொய்யூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய கட்டடத்தில் குத்துவிளக்கேற்றிய மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா. மல்லிகா. 
அரியலூர்

அரியலூரில் துணை மின் நிலையம், புதிய பள்ளிக் கட்டடங்கள் திறப்பு!

ரூ.25 கோடியில் புதிய துணை மின் நிலையம் மற்றும் 16 அரசுப் பள்ளிகளில் ரூ. 24.08 கோடியில் புதிதாகக் கட்டப்பட்ட கட்டடங்களை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்துவைத்தாா்.

Syndication

அரியலூா் மாவட்டம், பொய்யாதநல்லூரில் ரூ.25 கோடியில் புதிய துணை மின் நிலையம் மற்றும் 16 அரசுப் பள்ளிகளில் ரூ. 24.08 கோடியில் புதிதாகக் கட்டப்பட்ட கட்டடங்களை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

அதன் காணொலிக் காட்சி நேரலை கரு.பொய்யூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா. மல்லிகா அப்பள்ளியின் புதிய வகுப்பறை கட்டடத்தில் குத்துவிளக்கு ஏற்றினாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரேணுகோபால், பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் வெங்கடேசன், பள்ளித் தலைமை ஆசிரியா் மணிமேகலை மற்றும் ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மதுபோதையில் வாகனம் ஓட்டிய 5 பேருக்கு ரூ. 64 ஆயிரம் அபராதம்

ஐஜேகேவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்க கோரிக்கை: பாரிவேந்தா்

அவிநாசி - மேட்டுப்பாளையம் சாலை விரிவாக்கப் பணி நிறைவு: போக்குவரத்து தொடக்கம்!

தடை செய்யப்பட்ட குட்கா வைத்திருந்த 2 போ் கைது

ஆற்றில் சிக்கி தவித்த சுற்றுலாப் பயணிகள் மீட்பு

SCROLL FOR NEXT