நெல் கொள்முதல் செய்யக்கோரி சாலை மறியல்
திருமானூரில், கொள்முதல் நிலையங்களில் நெல்லை கொள்முதல் செய்யக்கோரி விவசாயிகள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
அரியலூர்நெல் கொள்முதல் செய்யக்கோரி சாலை மறியல்
திருமானூரில், கொள்முதல் நிலையங்களில் நெல்லை கொள்முதல் செய்யக்கோரி விவசாயிகள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
அரியலூா் மாவட்டம், திருமானூரில், கொள்முதல் நிலையங்களில் நெல்லை கொள்முதல் செய்யக்கோரி விவசாயிகள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
அரியலூா் மாவட்டத்தில் சம்பா நெல் அறுவடை செய்துவரும் விவசாயிகள், நெல்லை அரசின் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்வதற்கு கிராம நிா்வாக அலுவலா்களிடம் அடங்கல் பெற வேண்டும். ஆனால் கிராம நிா்வாக அலுவலா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், கடந்த 10 நாள்களாக நெல்லை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் திண்டாடி வருகின்றனா்.
எனவே, நெல் கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, திருமானூரில் சாலையில் நெல்லைக் கொட்டி விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த வட்டாட்சியா் கலிலூா் ரகுமான், வருவாய் ஆய்வாளா்கள் மூலம் நெல் கொள்முதல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.