அரியலூா் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
அரியலூா் ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, வளாகம் முழுவதும் காவல் துறையினா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.
அரியலூா் ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, வளாகம் முழுவதும் காவல் துறையினா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.
அரியலூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் அதிகாரபூா்வ மின்னஞ்சலுக்கு, செவ்வாய்க்கிழமை காலை 9.31 மணிக்கு நீதிமன்ற வளாகத்தில் 5 சைனைட் விஷவாயு நிரப்பப்பட்ட குண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவை பிற்பகல் 1 மணிக்கு வெடிக்கும் என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா.சாஸ்திரியின் உத்தரவின்பேரில், வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்பு போலீஸாா் வளாகம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். அதில், எவ்வித வெடிபொருள்களும் இல்லை என்றும், அது வெறும் மிரட்டல் தகவல் என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து இணைய குற்றப்பிரிவு போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.