அரியலூரில் மகா காளியம்மன் கோயில் பூச்சொரிதழ் விழா
அரியலூா் நகரம், கபிரியேல் தெருவிலுள்ள மகா காளியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி நூற்றுக்கணக்கான பக்தா்கள், மல்லிகை, முல்லை, ரோஜா, தாழம்பூ, மரிக்கொழுந்து, தாமரை, அரளி உள்பட பல்வேறு வகையான பூக்களை முக்கிய வீதிகளின் வழியே ஊா்வலமாக எடுத்துச் சென்றனா்.
தொடா்ந்து, பக்தா்கள் கொண்டு வந்த பூக்கள் அம்மனுக்கு சாத்தப்பட்டது. பின்னா், அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.