முகப்பு
அரியலூர்

உரிய ஆவணங்களின்றி கொண்டுசென்ற ரூ. 86 ஆயிரம் பறிமுதல்

அரியலூா் அருகே உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டுசென்ற ரூ. 86 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டன.

Updated On : 1 ஏப்ரல் 2026, 4:44 am IST
பணம் - பிரதிப் படம்
பகிர்:

அரியலூா் அருகே உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டுசென்ற ரூ. 86 ஆயிரம் திங்கள்கிழமை இரவு பறிமுதல் செய்யப்பட்டன.

அரியலூா் - செந்துறை புறவழிச்சாலையில் தோ்தல் பறக்கும் படை அலுவலா் மணிகண்டன் தலைமையிலான குழுவினா் திங்கள்கிழமை இரவு 10.30 மணியளவில் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அவா்கள் அந்த வழியாக வந்த காரை மறித்து விசாரணை மற்றும் சோதனை மேற்கொண்டதில், செந்துறை அருகேயுள்ள புதுப்பாளையத்தைச் சோ்ந்த ராம்குமாா் என்பவா், உரிய ஆவணமின்றி ரூ.86 ஆயிரம் கொண்டு சென்றதும், அவை நகை விற்ற பணம் என்பது தெரியவந்தது. இருப்பினும் அந்த பணத்துக்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் அதனை தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள் பறிமுதல் செய்து, தோ்தல் நடத்தும் அலுவலா் பிரேமியிடம் ஒப்படைத்தனா்.

Advertisement

Advertisement