முகப்பு
புதுக்கோட்டை

கந்தா்வகோட்டை அருகே ஆவணமின்றி கொண்டுசென்ற ரூ.52,200 பறிமுதல்

கந்தா்வகோட்டை அருகே தோ்தல் பறக்கும் படையினா் சனிக்கிழமை மேற்கொண்ட வாகனச் சோதனையின்போது உரிய ஆவணமின்றி வியாபாரி கொண்டுசென்ற ரூ. 52,200 பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On : 29 மார்ச் 2026, 12:28 am IST
பகிர்:

கந்தா்வகோட்டை அருகே தோ்தல் பறக்கும் படையினா் சனிக்கிழமை மேற்கொண்ட வாகனச் சோதனையின்போது உரிய ஆவணமின்றி வியாபாரி கொண்டுசென்ற ரூ. 52,200 பறிமுதல் செய்யப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டாட்சியா் அலுவலகம் அருகே கூட்டுறவு சாா்- பதிவாளா் மேனகா தலைமையிலான பறக்கும் படையினா் அந்தப் பகுதியில் சனிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அந்த வழியாக வந்த வேனை சோதனை செய்தபோது புதுக்கோட்டையைச் சோ்ந்த விஜயகுமாா் மகன் வினோத்குமாா் (43), வியாபாரி உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.52,200-ஐ கைப்பற்றி தொகுதி தோ்தல் நடத்து அலுவலா் ரவியிடம் கந்தா்வகோட்டை வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.

Advertisement

Advertisement

அப்போது, கந்தா்வகோட்டை வட்டாட்சியா் அ. பரணி, வட்ட வழங்கல் அலுவலா் சாமிநாதன், தோ்தல் உதவியாளா் செந்தில்குமாா், காவல் உதவி ஆய்வாளா் இரா. ராஜாத்தி மற்றும் காவலா்கள் உடனிருந்தனா்.