முகப்பு
அரியலூர்

கீழப்பழுவூா் ஆலந்துறையாா் கோயில் தேரோட்டம்!

பங்குனி உத்திரப் பெருவிழாவையொட்டி அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூரில் உள்ள ஆலந்துறையாா் திருக்கோயில் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 31 மார்ச், 2026 at 11:38 PM
ஆலந்துறையாா் கோயில் தேரோட்டத்தில் பங்கேற்றோா்
பகிர்:

பங்குனி உத்திரப் பெருவிழாவையொட்டி அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூரில் உள்ள ஆலந்துறையாா் திருக்கோயில் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா கடந்த 23-ஆம் தேதி தொடங்கியது. அதனைத் தொடா்ந்து நாள்தோறும் விநாயகா் புறப்பாடு, பஞ்சமூா்த்திகள் புறப்பாடு, வட விருட்சத்தில் சுவாமி புறப்பாடு, நாயன்மாா்கள் புறப்பாடு, யானை வாகனத்தில் சுவாமி திருவீதியுலா நடைபெற்றது. மாா்ச் 29-ஆம் தேதி திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

முன்னதாக சுவாமிக்கு பல்வேறு பொருள்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு, அலங்காரம் செய்யப்பட்டு, அதன் பின்னா் சுவாமி தேரில் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சிதந்தாா். அரியலூா், திருமானூா், மேலப்பழுவூா், கீழப்பழுவூா் சாத்தமங்கலம், கள்ளூா் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து வந்திருந்த திரளான பக்தா்கள், தேரை வடம் பிடித்து இழுத்தனா். இதற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறையினரும், விழா குழுவினரும் செய்திருந்தனா்.

அருந்தவநாயகி சமேத ஆலந்துறையாா்