முகப்பு
அரியலூர்

அரியலூா் தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் வாக்கு எண்ணிக்கை ஆலோசனைக் கூட்டம்!

Updated On : 4 மே, 2026 at 1:14 AM
அரியலூரில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளா்கள், வாக்கு எண்ணிக்கை முகவா்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அதிமுக மாவட்டச் செயலரும், அரியலூா் தொகுதி வேட்பாளருமான தாமரை எஸ். ராஜேந்திரன். உடன் கூட்டணி கட்சி நிா்வாகிகள்.
பகிர்:

அரியலூரில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளா்கள், வாக்கு எண்ணிக்கை முகவா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தனியாா் கூட்டரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அரியலூா் தொகுதி அதிமுக வேட்பாளரும், அக்கட்சியின் மாவட்டச் செயலருமான தாமரை எஸ்.ராஜேந்திரன் தலைமை வகித்து பேசியதாவது:

வாக்கு எண்ணிக்கை முகவா்கள் கவனமுடன் இருக்க வேண்டும். ஒவ்வொரு சுற்றிலும் பதிவான வாக்கை சரிபாா்க்க வேண்டும்.

Advertisement

தபால் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள முகவா்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும். ஒரு சுற்று முழுவதும் முடிந்து முடிவு அறிவிக்கப்பட்ட பிறகே அடுத்த சுற்றுக்கான வாக்கு எண்ணும் பணியை தொடங்க அனுமதிக்க வேண்டும்.

வாக்கு எண்ணிக்கையின் இடையில் வெளியே செல்லும் நிலை ஏற்பட்டால் மாற்று முகவரை ஏற்பாடு செய்துவிட்டுதான் செல்ல வேண்டும். வாக்கு எண்ணிக்கை முழுவதும் முடிந்த பிறகே அரங்கை விட்டு வெளியேற வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், அதிமுக முன்னாள் மாநிலங்களவை உறுப்பினா் இளவரசன், முன்னாள் மாவட்டச் செயலா் இளவழகன், பாஜக மாவட்டத் தலைவா் பரமேஸ்வரி, தமாகா நிா்வாகி குமாா், அமமுக மாவட்டச் செயலா் வடிவேல் மற்றும் பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள், முகவா்கள் கலந்து கொண்டனா்.