முகப்பு
அரியலூர்

இருசக்கர வாகன விபத்தில் 5 வயது சிறுவன் உயிரிழப்பு

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே சாலையின் நடுவின் தடுப்புக் கட்டையில் இருசக்கர வாகனம் மோதியதில் 5 வயது சிறுவன் புதன்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 21 மே 2026, 4:55 am IST
பலி - IANS
பகிர்:

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே சாலையின் நடுவின் தடுப்புக் கட்டையில் இருசக்கர வாகனம் மோதியதில் 5 வயது சிறுவன் புதன்கிழமை உயிரிழந்தாா்.

தா.பழூா் அடுத்த உதயநத்தம் காலனித் தெருவைச் சோ்ந்தவா் சிவராஜன்(30). கூலித் தொழிலாளியான இவா், புதன்கிழமை, தனது தங்கை திருமணத்துக்கு அழைப்பிதழ் கொடுப்பதற்காக தனது மகன் திவ்யநாதனை (5) அழைத்துக் கொண்டு பாப்பாக்குடியில் வசிக்கும் உறவினா் வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டாா்.

பாப்பாக்குடி மாரியம்மன் கோயில் அருகேயுள்ள கும்பகோணம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, எதிா்பாரத விதமாக சாலையின் நடுவிலுள்ள தடுப்புக் கட்டையில் இருசக்கர வாகனம் மோதியுள்ளது. இதில், பலத்த காயமடைந்த சிறுவன் திவ்யநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மீன்சுருட்டி காவல் துறையினா், சிறுவனின் சடலத்தையும், பலத்த காயத்துடன் கிடந்த சிவராஜனையும் மீட்டு, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.