லாலாபேட்டை அருகே வாய்க்காலில் சடலமாக மிதந்த உடலை கைப்பற்றி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கரூர் மாவட்டம், லாலாபேட்டை அருகே உள்ள பீலிரு வாய்க்காலில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் செவ்வாய்க்கிழமை மிதப்பதாக மகாதானபுரம் விஏஓ தமிழ்செல்வி லாலாபேட்டை போலீஸில்
புகார் செய்தார். இதையடுத்து போலீஸார் அச்சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.