கரூர்

கரூரில் மாவட்ட அளவிலான ஜூனியர் டென்னிஸ் தொடக்கம்

DIN

கரூரில் மாவட்ட அளவிலான ஜூனியர் டென்னிஸ் போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின.
 கரூர் வின்னர்ஸ் டென்னிஸ் அகாதெமி சார்பில் வெள்ளிக்கிழமை முதல் வரும் 28-ஆம் தேதி வரை 3 நாட்கள் நடைபெற உள்ள இப்போட்டியை தொழில் அதிபர்கள் வெங்கடாசலம், பார்வதி, காவல் துணைக் கண்காணிப்பாளர் அண்ணாதுரை, மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் அப்துல்பாரி ஆகியோர் தொடக்கிவைத்தனர்.
முன்னதாக அகாதெமி தலைவர்கள் மோகன், சிங்காரவேலு ஆகியோர் வரவேற்றனர். இதில் 10, 12, 14, 16 வயதுக்குட்பட்ட மாணவர்களும், 16 வயதுக்குட்பட்ட மாணவிகளும் பங்கேற்று விளையாடுகிறார்கள். மேலும் ஆண்களுக்கு ஒற்றையர் மற்றும் இரட்டையர் போட்டிகளும் நடைபெற உள்ளன. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு மொத்தம் ரூ. 1.2 லட்சம் மதிப்பில் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த பிளாக்பஸ்டர்? கவனம் ஈர்க்கும் நடிகர் டிரைலர்!

என் பார்வை உன்னோடு..

சந்தேஷ்காளியில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதற்கான ஆதாரம் இல்லை: மம்தா

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 190

3 தோற்றங்களில் விக்ரம்?

SCROLL FOR NEXT