கரூர்

காங்கிரஸ் சார்பில் நேரு பிறந்தநாள் கொண்டாட்டம்

DIN

முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்த நாளை முன்னிட்டு, கோவிந்தம்பாளையத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, நோட்டு புத்தகம் ஆகியவற்றை காங்கிரஸார் வழங்கினர்.
முன்னாள் பிரதமர் நேருவின் 128 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, தாந்தோணி வட்டார காங்கிரஸ் சார்பில் கோவிந்தம்பாளையத்தில் உள்ள நேரு, காந்தி, காமராஜர் ஆகியோரது சிலைகளுக்கு முன்னாள் மாவட்டத் தலைவர் பேங்க் கே. சுப்ரமணியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி சிறப்புரையாற்றினார்.  நிகழ்ச்சிக்கு தாந்தோணி வட்டாரத் தலைவர் ஜிபிஎம். மனோகரன் தலைமை வகித்தார். தொடர்ந்து அங்குள்ள அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் மற்றும் சிலேட்டுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ வெள்ளியணை ராமநாதன்,  மாவட்ட துணை தலைவர் எம். சின்னையன், கரூர் வட்டாரத் தலைவர் ஆடிட்டர் ரவிச்சந்திரன், மாவட்ட சேவாதள தலைவர் செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து வாங்கலில் கரூர் வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆடிட்டர் ரவிச்சந்திரன் தலைமையில் மாவட்ட முன்னாள் தலைவர் பேங்க் கே.சுப்ரமணியன் கட்சிக்கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். நிகழ்ச்சியில் மகளிர் காங்கிரஸ் தலைவி மீனாட்சி, சேவாதளம் செல்வராஜ், கிராம காங்கிரஸ் கமிட்டித் தலைவர் முருகையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT