கரூர்

விபத்தில் காயமடைந்த பள்ளி மாணவர் சாவு

DIN

பரமத்தி ஒன்றியம் தென்னிலை அருகே விபத்தில் காயமடைந்த பள்ளி மாணவர் புதன்கிழமை காலை இறந்தார்.
 க.பரமத்தி ஒன்றியம், தென்னிலை தெற்கு ஊராட்சிக்குட்பட்ட செஞ்சேரிவலசைச் சேர்ந்தவர் செல்லமுத்து மகன் ரிதீஸ் (14) .அப்பகுதியிலுள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்த இவர் கடந்த 28-ம் தேதி காலை க.பரமத்தியிலிருந்து தென்னிலைக்கு மொபெட்டில் வந்தபோது தென்னிலை பெட்ரோல் பங்க்  அருகே கரூர் நோக்கி வந்த கார் மோதி படுகாயமடைந்தார்.
இதையடுத்து  கோவை தனியார்  மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.  தென்னிலை போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

இன்று நீட் தோ்வு: 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

SCROLL FOR NEXT