முகப்பு
கரூர்

மாவட்ட சதுரங்கப் போட்டியில் அரசுப் பள்ளி மாணவர் சிறப்பிடம்

கரூரில் அண்மையில் (அக். 9) நடைபெற்ற மாவட்ட சதுரங்கப் போட்டியில் கார்வழி தொடக்கப்பள்ளி மாணவர் மோகன்குமார் சிறப்பிடம் பிடித்தார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:51 PM
பகிர்:

கரூரில் அண்மையில் (அக். 9) நடைபெற்ற மாவட்ட சதுரங்கப் போட்டியில் கார்வழி தொடக்கப்பள்ளி மாணவர் மோகன்குமார் சிறப்பிடம் பிடித்தார்.
கரூர் ஆனந்த சதுரங்க அகாதெமி சார்பில் கடந்த 9 ஆம் தேதி கரூரில் நடைபெற்றது. இதில், 6 முதல் 17 வயது வரையிலான பள்ளி மாணவர்கள் அவரவர் வயது மற்றும் பிரிவுகளில் தனித்தனி போட்டிகளில் கலந்து கொண்டனர். இதில், கார்வழி தொடக்கப்பள்ளி மாணவன் மோகன்குமார், அவர் பங்கேற்ற போட்டியில் வெற்றி பெற்றார். தொடர்ந்து சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டது. இதையடுத்து பள்ளியில் புதன்கிழமை மாணவர் மோகன்குமாரை பள்ளித் தலைமை ஆசிரியர் வாசுதேவன், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பாராட்டினர்.

முழு கட்டுரையைப் படிக்க →