பள்ளபட்டி வாரச்சந்தையில் பேரூராட்சி நிர்வாகம் மூலம் ரூ. 3.80 லட்சத்தில் கட்டப்பட்ட சுகாதார வளாகம் சுமார் 10 ஆண்டுகளாக பூட்டியே கிடப்பதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
பள்ளபட்டி பேருந்து நிலையம் அருகே திங்கட்கிழமை காலை முதல் மாலையில் செயல்படும் வாரச்சந்தைக்கு பள்ளபட்டி மட்டுமின்றி சுற்றுப்புறப் பகுதி மக்களும் வந்து காய்கனிகள்,மளிகைப் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.
இந்த சந்தையில் உள்ள சுகாதார வளாகம் 10 ஆண்டுகளாக மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாததால் இங்கு வரும் பொதுமக்கள், கடைக்காரர்கள்,பேருந்து பயணிகள் ஆகியோர் இதைப் பயன்படுத்த முடியாமல் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
இதற்கு பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.