மூலிமங்கலம் அருகே மின்சாரம் தாக்கி சுமை தூக்கும் தொழிலாளி இறந்தார்.
கரூர் மாவட்டம், மண்மங்கலம் அடுத்த புகழூர் கட்சியப்பன் காலனியைச் சேர்ந்தவர் சரவணன் (38), சுமை தூக்கும் தொழிலாளி. இவர் வியாழக்கிழமை மாலை வேப்பங்காட்டில் உள்ள தென்னந்தோப்பில் தேங்காய் ஏற்றச் சென்றபோது லாரியின் மேற்பகுதியில் நின்றுள்ளார். அப்போது லாரியின் மேல்பகுதியில் சென்ற மின்வயர் இவர் மீது உரசி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.