கரூர்

அதிமுக சார்பில் கிரிக்கெட் போட்டி தொடக்கம்

DIN

எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கரூர் மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி சனிக்கிழமை தொடங்கியது.
கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் போட்டிகளை கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ எம். கீதாமணிவண்ணன் தலைமை வகித்து தொடங்கிவைத்தார். மாவட்ட அவைத் தலைவர் ஏ.ஆர். காளியப்பன், முன்னாள் கரூர் ஒன்றியக் குழுத் தலைவர் எஸ். திருவிகா, நகரச் செயலர் வை. நெடுஞ்செழியன், ஒன்றியச் செயலர் இன்ஜினியர் கமலக்கண்ணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் கரூர் நகர்மன்றத் தலைவர் தமிழ்நாடு எம். செல்வராஜ்,பொதுக்குழு உறுப்பினர் மல்லிகாசுப்ராயன், நகர இளைஞரணிச் செயலர் சேரன்பழனிசாமி, மாணவரணிச் செயலர் தானேஷ் என்கிற முத்துக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
போட்டிகளில் 30-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன. வரும் 18-ம்தேதி வரை நடைபெற இப்போட்டியில் முதலிடம் பெறும் அணிக்கு பரிசாக ரூ. 20,000, 2-ம் பரிசாக ரூ.15,000, 3-ம் பரிசாக ரூ.10,000 வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை அதிமுக மாவட்டச் செயலரும், போக்குவரத்துத் துறை அமைச்சருமான எம்.ஆர். விஜயபாஸ்கர் செய்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மீண்டும் உச்சபட்ச மின் நுகா்வு

நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை!

சிஎஸ்கே போட்டியில் பிரபலமான ரசிகரை கௌரவித்த லக்னௌ அணி!

கவனம் ஈர்க்கும் வசந்தபாலனின் 'தலைமைச் செயலகம்' டீசர்!

அதிக வெயில் ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

SCROLL FOR NEXT